ADDED : மார் 14, 2026 06:14 AM
நாய்கள் துரத்தியதில்மான் காயம்
வெள்ளகோவில் அடுத்துள்ள வட்டமலைக்கரை ஓடைப்பகுதியில், புள்ளிமான் வசிக்கின்றன. வழிதவறி வந்த 2.50 வயதுள்ள ஆண் மான், முத்துர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில், விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது.அப்பகுதியில் உள்ள தெருநாய்கள், மானை துரத்தியது. பொதுமக்கள், நாய்களை விரட்டிவிட்டு, மானை மீட்டனர். காங்கயம் வனத்துறை பணியாளர்களிடம் மானை ஒப்படைத்தனர். காலில் காயம் ஏற்பட்டிருந்ததால் முத்துார், கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு, ஊதியூர் காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது.
சூதாட்டம்; 6 பேர் கைது
காங்கயம்,சென்னிமலை ரோடு பகுதியில், சிலர் சூதாடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. காங்கயம் போலீசார் விரைந்து சென்று, தனியார் கட்டடத்தில், பணம் வைத்துசீட்டுவிளையாடிய ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, சீட்டு கட்டுகளையும், 5,400ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
காங்கயம்: காங்கயம்,சென்னிமலை ரோடு பகுதியில், சிலர் சூதாடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
காங்கயம் போலீசார் விரைந்து சென்று, பணம் வைத்துசீட்டுவிளையாடிய ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, சீட்டு கட்டுகளையும், 5,400 ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
