sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 போலீஸ் துப்பாக்கி வெடித்தது: திருப்பூரில் பரபரப்பு

/

 போலீஸ் துப்பாக்கி வெடித்தது: திருப்பூரில் பரபரப்பு

 போலீஸ் துப்பாக்கி வெடித்தது: திருப்பூரில் பரபரப்பு

 போலீஸ் துப்பாக்கி வெடித்தது: திருப்பூரில் பரபரப்பு


ADDED : நவ 22, 2025 07:54 AM

Google News

ADDED : நவ 22, 2025 07:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரில் நகை கண்காட்சி பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரரின் ஏ.கே.47 ரக துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோட்டைச் சேர்ந்த நகை விற்பனை நிறுவனம், திருப்பூரில் நகை விற்பனை கண்காட்சி ஏற்பாடு செய்துள்ளது.

மங்கலம் ரோடு பாரப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் இக்கண்காட்சி நடக்கிறது. இதற்காக, பாதுகாப்பு பணியில் திருப்பூர் மாநகர ஆயுதப்படை போலீசார் இருவர் ஈடுபட்டிருந்தனர்.

அதில், பாலகுமார் என்ற போலீஸ்காரர், கழிப்பறை செல்வதற்காக ஏ.கே.47 ரக துப்பாக்கியை இடம் மாற்றி வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, சேப்டி லாக்கர் திறந்து கொண்டு துப்பாக்கியிலிருந்து குண்டுகள் சீறிப்பாய்ந்தது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இருப்பினும் திடீரென துப்பாக்கி வெடித்ததால், சற்று பரபரப்பு நிலவியது. இது குறித்து, திருப்பூர் சென்ட்ரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us