sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

டயர் வெடித்து விபத்து உதவிய போலீஸ்காரர்

/

டயர் வெடித்து விபத்து உதவிய போலீஸ்காரர்

டயர் வெடித்து விபத்து உதவிய போலீஸ்காரர்

டயர் வெடித்து விபத்து உதவிய போலீஸ்காரர்


ADDED : மே 16, 2025 12:37 AM

Google News

ADDED : மே 16, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்குளி; திருப்பூர் அருகே டயர் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சென்ற போலீஸ்காரர் டிரைவரை மீட்டு, வாகனத்தை அப்புறப்படுத்தினார்.

ஈரோட்டில் இருந்து மரக்கட்டைகளை சரக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டு சோமனுார் நோக்கி சென்று கொண்டிருந்தது. வாகனத்தை பாபு சாகுல் அமீர், 52 என்பவர் ஓட்டி சென்றார்.

சரக்கு வாகனம் பல்லகவுண்டம்பாளையம் - செங்கப்பள்ளி பைபாஸில் வந்த போது, திடீரென டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயம் ஏற்படாமல் தப்பினார். விபத்தில் ரோடு முழுவதும் கட்டைகள் சிதறி கிடந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சென்ற ஊத்துக்குளி போலீஸ்காரர் கிருஷ்ணமூர்த்தி, சரக்கு வாகனத்தில் இருந்த மரக்கட்டைகளை மக்கள் உதவியோடு விரைந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தார்.

விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us