/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யல் கரையோரம் பொங்கல் விழா நிறைவு
/
நொய்யல் கரையோரம் பொங்கல் விழா நிறைவு
ADDED : ஜன 16, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நொய்யல் பண்பாட்டு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இணைந்து, நொய்யல் கரையோரம் பொங்கல் விழா நடத்தினர்.
நேற்று, தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற, சிலம்பாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில், 6 முதல், 60 வயது வரையிலான, 100 பெண்கள் பங்கேற்று, சிலம்பம் சுற்றி அசத்தினர். பங்கேற்ற பெண்களுக்கு, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
தொடர்ந்து, பறை இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 3 நாள் நடந்த பொங்கல் விழாவை, திரளானோர் கண்டு ரசித்தனர்.