sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

2.39 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கல்

/

2.39 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கல்

2.39 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கல்

2.39 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கல்


ADDED : ஜன 11, 2024 07:07 AM

Google News

ADDED : ஜன 11, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் ; திருப்பூர் மாவட்டத்தில் முதல்நாளான நேற்று, 2 லட்சத்து 39 ஆயிரத்து 514 ரேஷன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு பெற்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,135 கடைகள் மூலம், 7 லட்சத்து 97 ஆயிரத்து 852 அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது. வழக்கமான குடிமைப்பொருள் வழங்கல் பணிகள் நிறுத்தப்பட்டு, நேற்று காலை முதல் அனைத்து ரேஷன்கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் ரேஷன் கடைகளுக்குவந்து, வரிசையில் காத்திருந்து கார்டுதாரர்கள், பரிசு தொகுப்பு பெற்றுச்செல்கின்றனர். கைரேகை பதிவு செய்யப்பட்டும், கைரேகை பதிவு செய்ய முடியாதோரிடம் கையெழுத்து பெற்றும், பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படுகிறது.

முதல்நாளான நேற்று, மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 514 கார்டுகளுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்நாளிலேயே, மொத்த கார்டுதாரர்களில் 30 சதவீதம் பேருக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us