/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்காளியம்மன் திருவிழா குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
/
பொங்காளியம்மன் திருவிழா குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
பொங்காளியம்மன் திருவிழா குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
பொங்காளியம்மன் திருவிழா குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
ADDED : மே 16, 2025 12:47 AM

குன்னத்துார்,; திருப்பூர் அருகேயுள்ள ஆதி குன்னத்துார், பொங்காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 2ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று அதிகாலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பாரியூர் கொண்டத்து காளியம்மனை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பொங்காளியம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர். காலை 11:00 மணிக்கு ரத ஆரோகணம், மாலை 4:00 மணிக்கு ரத உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நாளை இரவு 9:00 மணிக்கு அலங்கார முத்து பல்லக்கில் அம்மன் திருவீதி உலா செல்லுதல். தொடர்ந்து வள்ளி கும்மி மற்றும் பெருஞ்சலங்கை ஆட்டம் நடக்கிறது. நாளை மறுநாள் இரவு 9:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா செல்லுதல், 19ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 20ம் தேதி காலை மறு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.