/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவாலயங்களில் பிரதோஷ பூஜை சிவனடியார்கள் மனமுருகி வழிபாடு
/
சிவாலயங்களில் பிரதோஷ பூஜை சிவனடியார்கள் மனமுருகி வழிபாடு
சிவாலயங்களில் பிரதோஷ பூஜை சிவனடியார்கள் மனமுருகி வழிபாடு
சிவாலயங்களில் பிரதோஷ பூஜை சிவனடியார்கள் மனமுருகி வழிபாடு
ADDED : மார் 28, 2025 03:22 AM

திருப்பூர்: திருப்பூர் மற்றும் சுற்றுப் பகுதி சிவன் கோவில்களில் நேற்று, பிரதோஷம் முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்று எம்பெருமானை வழிபட்டனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை, திருப்பூர் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவில் மற்றும் அனைத்துப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது. பிரதோஷத்தையொட்டி, நந்திகேஸ்வரருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியன நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதே போல், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. லட்சுமி நகர் அண்ணாமலையார் கோவில், டி.பி.ஏ., காலனி காசி விஸ்வநாதர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி, அலகுமலை கைலாசநாதர் கோவில், பூச்சக்காடு செல்வவிநாயகர் கோவில் - சொக்கநாதர் சன்னதி, உள்ளிட்ட திருப்பூர் பகுதி சிவாலயங்களில் பிரதோஷம் முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இச்சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.