/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டம் செயல்படுத்த ஆயத்தம்
/
வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டம் செயல்படுத்த ஆயத்தம்
வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டம் செயல்படுத்த ஆயத்தம்
வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டம் செயல்படுத்த ஆயத்தம்
ADDED : ஆக 03, 2025 10:00 PM

திருப்பூர்; வீடு தேடி ரேஷன் பொருடகள் வழங்கும் திட்டத்துக்கான முன்னேற்பாடுகளை கூட்டுறவு துறை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் 2.25 கோடி ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. ரேஷன் கடைகளுக்குச் சென்று கைவிரல் ரேகை அல்லது கண்விழி ரேகை பதிவு செய்த பின் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது.தற்போது கடைகளுக்கு நேரில் சென்று பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு நேரடியாக வீட்டில் சென்று பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 1 முதல் 5ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சில இடங்களில் இதற்கான சோதனை முயற்சி நடந்தது. பிற மாவட்டங்களிலும் சோதனை முயற்சி கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக தற்போது 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இம்முறையில் பொருள் வழங்கப்படவுள்ளது.
''நகர்ப்புற பகுதிகளில் 70; கிராமப் பகுதியில் 60; மலைப்பகுதியில் 50 ரேஷன் கார்டுகள் தகுதியானவையாக இருந்தால், ஒரே நாளில், தகுதியான அனைவருக்கும் பொருட்கள் வழங்க வேண்டும். முதல் நாளில் 70 அல்லது 60 பேருக்கு வழங்க வேண்டும். இரண்டாவது நாளும் அட்டை இருந்தால் தனி வாகனத்தில் கொண்டு செல்ல வேண்டும்'' உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.வரும் 7ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அல்லது 15 ம் தேதி சுதந்திர தினத்தில் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.