ADDED : ஜன 05, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:சென்னையில், 19ம் தேதி நடைபெறும், 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளை, பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். அன்று மாலை திருப்பூரில் நடக்கவுள்ள, பா.ஜ., நடத்தும் பொங்கல் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
கடந்த, 2ம் தேதி திருச்சி விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில், இந்த மாதத்திலேயே அவர் மீண்டும் தமிழகம் வருவதும், திருப்பூரில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதும், பா.ஜ.,வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திஉள்ளது.