/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனியார் ஆலை விவகாரம்: விவசாயிகள் உண்ணாவிரதம்
/
தனியார் ஆலை விவகாரம்: விவசாயிகள் உண்ணாவிரதம்
ADDED : ஜூலை 08, 2024 07:11 AM
தாராபுரம் : தாராபுரம் அருகே பொன்னாபுரம் பகுதியில், தேங்காய் நார் ஆலை கட்டப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாது-காப்பு ஏற்படும். நீரோடை பகுதியில் கட்டடம் கட்ட வழங்கப்-பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் தலைமையில், 15க்கும் மேற்பட்டோர், பொன்னாபுரத்தில் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அவர்-களிடம் பேச்சுவார்த்தை நடத்திய உள்ளாட்சி அதிகாரிகள், தாரா-புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நாளை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் எனக் கூறவே, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.