/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 25ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
வரும் 25ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஏப் 23, 2025 06:56 AM
திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகம், நான்காவது தளத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் காலை, 10:00 மணி முதல் மதியம், 1:30 மணி வரை நடைபெறும் முகாமில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
வேலை அளிக்கும் நிறுவனங்களால் தேர்வு செய்யப்படுவோருக்கு முகாம் நாளிலேயே பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.
இம்முகாமில், பத்தாம் பகுப்பு, பிளஸ்2, ஐ.டி.ஐ., - டிப்ளமோ பிடித்தவர்கள், பட்டப்படிப்பு படித்த வேலை தேடுவோர் பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

