/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டு விவசாயிகளுக்கு வழங்க மல்பெரி நாற்றுக்கள் உற்பத்தி
/
பட்டு விவசாயிகளுக்கு வழங்க மல்பெரி நாற்றுக்கள் உற்பத்தி
பட்டு விவசாயிகளுக்கு வழங்க மல்பெரி நாற்றுக்கள் உற்பத்தி
பட்டு விவசாயிகளுக்கு வழங்க மல்பெரி நாற்றுக்கள் உற்பத்தி
ADDED : ஆக 21, 2025 08:16 PM

உடுமலை; உடுமலை பட்டு வளர்ச்சித்துறை சார்பில், விவசாயிகளுக்கு வழங்க மல்பெரி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
உடுமலை பகுதிகளில், வெண் பட்டுக்கூடு உற்பத்தி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டு புழுக்களுக்கு, மல்பெரி இலைகள் உணவாக வழங்கப்படுகிறது.
பட்டுக்கூடு உற்பத்தி மேற்கொள்ளும் விவசாயிகள், புழு வளர்ப்பு மனைகளில் உள்ள புழுக்களுக்கு மல்பெரி இலைகள் உணவாக வழங்குவதற்கு, அருகிலேயே மல்பெரி சாகுபடி செய்து வருகின்றனர். மல்பெரி செடிகளை, சேலம், வேடசந்துார் உள்ளிட்ட பகுதிகளில் மல்பெரி நாற்றுக்கள் வாங்கி நடவு செய்து வந்தனர்.
இந்நிலையில், உடுமலை மைவாடியிலுள்ள, பட்டு வளர்ச்சித்துறை அலுவலக வளாகத்தில், மல்பெரி நாற்றுப்பண்ணை அமைத்து, விவசாயிகளுக்கு தேவையான மல்பெரி நாற்றுக்கள் உற்பத்தி செய்து மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.