sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கிராமங்களில் நடவு செய்ய மரக்கன்றுகள் உற்பத்தி

/

 கிராமங்களில் நடவு செய்ய மரக்கன்றுகள் உற்பத்தி

 கிராமங்களில் நடவு செய்ய மரக்கன்றுகள் உற்பத்தி

 கிராமங்களில் நடவு செய்ய மரக்கன்றுகள் உற்பத்தி


ADDED : டிச 27, 2025 06:32 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள கிராமங்களில், பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் நாற்றுப்பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீரை அதிகரிக்க, மரம் வளர்ப்பு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மேலும், நீர் நிலைகள், பொது இடங்களில் மரக்கன்றுகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில், மடத்துக்குளம் ஒன்றியத்தில், 11 ஊராட்சிகளில், குளம், குட்டைகள், பொது இடங்கள், மற்றும் பூங்காக்கள், பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. ஒன்றியத்துக்கான, நாற்றுப்பண்ணை காரத்தொழுவு ஊராட்சியில் அமைக்கப்பட்டு, புங்கன், நாவல், பூவரசு, சரங்கொன்றை, மகா கனி, பாதாம் உள்ளிட்ட மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு, ஆறு அடி வரை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ஊராட்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு ஏற்ப, மரக்கன்றுகள் தயார் செய்யப்படுகிறது. காரத்தொழுவு நாற்றுப்பண்ணையில், 12 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது.






      Dinamalar
      Follow us