/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளி 28 பேருக்கு செயற்கை கால் அளவீடு
/
மாற்றுத்திறனாளி 28 பேருக்கு செயற்கை கால் அளவீடு
ADDED : ஜூன் 09, 2025 12:19 AM

திருப்பூர்; திருப்பூர் சக் ஷம் அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீடு முகாம், மங்கலம் ரோட்டிலுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
செயற்கை கால்கள், காலிபர் மற்றும் இதர உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்த 28 பேருக்கு முகாமில் அளவீடு செய்யப்பட்டது.
முகாமில், பூச்சக்காடு தம்பி நண்பர்கள் நற்பணி மன்றத்துடன் இணைந்து இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
சக் ஷம் அமைப்பின், மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் முத்துரத்தினம், தம்பி நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகி ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவக் குழுவினர் கண் பரிசோதனை மேற்கொண்டனர். மொத்தம், 67 பேர் பரிசோதனை செய்ததில், 9 பேருக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. 7 பேர் இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். 34 பேருக்கு, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு சோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
சக் ஷம் மாநில நிர்வாகி கண்ணன், மாவட்ட துணை தலைவர் ரத்தினசாமி மற்றும் தம்பி நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். சக் ஷம் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வம் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.