sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குப்பை கொட்ட எதிர்ப்பு; ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

/

குப்பை கொட்ட எதிர்ப்பு; ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

குப்பை கொட்ட எதிர்ப்பு; ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

குப்பை கொட்ட எதிர்ப்பு; ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு


ADDED : டிச 26, 2024 11:41 PM

Google News

ADDED : டிச 26, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்; திருப்பூரில் தினமும், 700 டன் குப்பை சேகரமாகிறது. சேகரமாகும் குப்பைகள், மாநகராட்சி சார்பில், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் உள்ள காலாவதியான பாறைக் குழியில் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்படும்; சுகாதார கேடு ஏற்படும் என்பதால், பாறைக் குழியில் குப்பை கொட்ட அனுமதிக்கக்கூடாது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு மாநில செயலாளர் சதீஷ்குமார், பசுமைத்தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். குப்பைகளை அப்புறப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

ஆனால், மாநகராட்சி சார்பில், பாறைக் குழியில் தொடர்ந்து, குப்பை கொட்டப்பட்டு வருகிறது. கடந்த, 22ம் தேதி காலை, வழக்கு தொடுத்த சதீஷ்குமார் மற்றும் பொங்குபாளையம் ஸ்ரீதர், ஆகியோர் குப்பை கொட்ட சென்ற லாரியை சிறை பிடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இருவரையும் பெருமாநல்லுார் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று குப்பை கொட்டவரும் லாரியை தடுக்க கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். கடந்த 23ம் தேதி இரவு முதல் சதீஷ்குமார், பாபுஜி நகர் விநாயகர் கோயில் அருகில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், குப்பை கொட்டுவதை நிறுத்த கோரியும் இன்று (27ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் பாபுஜி நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

மாநகராட்சி நிர்வாகத்தினர், குப்பை கொட்டப்பட்டு வரும் பாறைக்குழி பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் அதைச் சுற்றி தடுப்பு அமைத்தல், அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்தல் ஆகிய பணிகளை அவசரகதியில் செய்து வருகின்றனர்.

கடந்த 23ம் தேதி இரவு முதல் சதீஷ்குமார், பாபுஜி நகர் விநாயகர் கோயில் அருகில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், குப்பை கொட்டுவதை நிறுத்த கோரியும் இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் பாபுஜி நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us