sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாய்க்கால் வழித்தடத்தில் பள்ளம் அதிகாரிகளை கண்டித்து மறியல்

/

வாய்க்கால் வழித்தடத்தில் பள்ளம் அதிகாரிகளை கண்டித்து மறியல்

வாய்க்கால் வழித்தடத்தில் பள்ளம் அதிகாரிகளை கண்டித்து மறியல்

வாய்க்கால் வழித்தடத்தில் பள்ளம் அதிகாரிகளை கண்டித்து மறியல்


ADDED : ஜூன் 02, 2025 11:41 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : பல்லடம்,- மங்கலம் ரோடு, வேலம்பாளையம் அருகே, பி.ஏ.பி., பிரதான வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலை ஒட்டி உள்ள மண் தடமானது, ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகருக்கு செல்கிறது.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 20 அடி அகலம் கொண்ட இந்த மண் தடத்தின் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பொதுமக்கள், பல்லடம் - மங்கலம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

கிளை வாய்க்காலுக்காக அமைக்கப்பட்ட குழாய் அரைகுறையாக பதிக்கப்பட்டதால் வழித்தடம் வலுவிழந்து பள்ளம் உருவானது.

இவ்வழியாக சென்ற லாரி மற்றும் டூவீலர் ஆகியவை சமீபத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. நேற்று டூவீலரில் வந்த வாகன ஓட்டி ஒருவர் பள்ளத்தில் தவறி விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள், நீர் வழித்தடத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us