நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை அரசு போக்குவரத்துக்கழக அலுவலகம் முன், தமிழக அரசு சிறப்பு பஸ்கள் என்ற பெயரில், தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து, தனியார் மயமாக்குவதைக்கண்டித்து, 5 ஆண்டுகளாகியும், தொழிலாளர்கள் சம்பள ஒப்பந்த பேச்சு நடத்தாததைக்கண்டித்தும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிப்பலன்கள் வழங்காததைக் கண்டித்தும், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளைச்செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மண்டல துணைப்பொதுச்செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

