/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கல்
ADDED : ஜூலை 25, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடத்தில், மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது.
பல்லடம் வட்டாரப் பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள் சிலர், ஊன்றுகோல் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக தகவல் அறிந்த மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை நிர்வாகிகள், அவர்களுக்கு இலவசமாக ஊன்றுகோல் வழங்க முன் வந்தனர்.
திருப்பூர் ரோட்டில், மாற்றுத்திறனாளிகள், 15 பேருக்கு ஊன்றுகோல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை நிர்வாகிகளின் பங்களிப்புடன் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் சிலரும் பங்கேற்றனர்.