/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
ADDED : மார் 11, 2024 09:31 PM
உடுமலை:உடுமலை ராஜேந்திரா ரோட்டில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை நகரில் பிரதான ரோடுகளில் ஒன்று ராஜேந்திரா ரோடு. இந்த ரோட்டில், நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா, வணிக நிறுவனங்கள், ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளன.
இதனால், இந்த ரோட்டில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும். ஆனால், ராஜேந்திரா ரோட்டில், தள்ளு வண்டி கடைகளும், கடைகளின் தற்காலிக ஆக்கிரமிப்புகளும் காணப்படுகின்றன.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினரும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

