sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வெளியூர் பஸ்சில் 'கியூஆர் கோடு' இனி, சில்லரை பிரச்னை இருக்காது!

/

வெளியூர் பஸ்சில் 'கியூஆர் கோடு' இனி, சில்லரை பிரச்னை இருக்காது!

வெளியூர் பஸ்சில் 'கியூஆர் கோடு' இனி, சில்லரை பிரச்னை இருக்காது!

வெளியூர் பஸ்சில் 'கியூஆர் கோடு' இனி, சில்லரை பிரச்னை இருக்காது!


ADDED : மார் 27, 2025 12:31 AM

Google News

ADDED : மார் 27, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; வெளியூர் செல்லும் அரசு பஸ்களில் 'கியூஆர் கோடு' மூலம் டிக்கெட் பெறும் வசதி திருப்பூர் மண்டலத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் நடத்துனரிடம் டிக்கெட் பெற்று சில்லரை பெறுவதில் சிரமங்கள் இருப்பதாலும், பெரும்பாலான இடங்களில் 'கியூஆர் கோடு' மூலம் ஆன்லைன் பரிவர்த்தனையில் பணம் அனுப்பி, பயணியர் பழகி விட்டதாலும், அரசு போக்குவரத்து கழகம் டவுன், சர்வீஸ் பஸ்களிலும் 'கியூஆர் கோடு' மூலம் டிக்கெட் வழங்கும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது.

கோவை கோட்டத்துக்கு உட்பட்ட, திருப்பூர் மண்டலத்தில் முதல் கட்டமாக உடுமலை, கோவை மார்க்கமாக செல்லும் பஸ்களில் 'கியூஆர் கோடு' மூலம் டிக்கெட் பெறும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பஸ் நடத்துனர்களிடம் உள்ள 'கியூஆர்' கோடுகளில் ஸ்கேன் செய்து, டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். திருப்பூர் மண்டலத்தில் இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் படிப்படியாக இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us