/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தினமலர் பட்டம்' இதழ் சார்பில் வினாடி-வினா: என்.வி. மெட்ரிக். மாணவர்கள் அசத்தல்
/
'தினமலர் பட்டம்' இதழ் சார்பில் வினாடி-வினா: என்.வி. மெட்ரிக். மாணவர்கள் அசத்தல்
'தினமலர் பட்டம்' இதழ் சார்பில் வினாடி-வினா: என்.வி. மெட்ரிக். மாணவர்கள் அசத்தல்
'தினமலர் பட்டம்' இதழ் சார்பில் வினாடி-வினா: என்.வி. மெட்ரிக். மாணவர்கள் அசத்தல்
ADDED : நவ 05, 2025 08:13 PM

உடுமலை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டி பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவுத்திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் மெகா வினாடி - வினா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன.
நடப்பாண்டு போட்டியானது, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன.
இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர்.
அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வினாடி - வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 100 மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.
மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'ஏ' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியர் பிரியவர்ஷினி, மெர்லின் ஹர்ஷா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் சுகந்தி, செயலர் ரேவதி, ஒருங்கிணைப்பாளர் சக்திவேலு, ஆசிரியர்கள் சேதுகவுரீஸ்வரி, மதிஸ்ரீ, ஈஸ்வரி ஆகியோர், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
நற்பண்புகளை வளர்க்கிறது! பள்ளி முதல்வர் சுகந்தி கூறுகையில்,'' தினமலர் பட்டம் இதழ், அறிவையும், பொழுதுபோக்கையும் இணைத்து வழங்கும் ஒரு சிறந்த இதழாகும். இவ்விதழ் மாணவர்களிடையே வாசிப்புததிறனை அதிகரித்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு என பல துறைகளில், பயனுள்ள தகவல்கள் இடம் பெறுகின்றன.
மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த, கட்டுரை, கவிதை, ஓவியம், புதிர், வினாடி-வினா போன்றவற்றை அனுப்பி பங்கேற்கும் வாய்ப்பும் உள்ளது. எங்கள் பள்ளி மாணவர்கள், பட்டம் இதழை தினமும் ஆர்வத்துடன் படித்து வருகின்றனர்.
படிப்பது மட்டுமல்ல சிந்திப்பதும் அவசியம் என்ற நோக்கத்தில், உருவாகியுள்ள இந்த இதழ் நிச்சயம் மாணவர்களின் மனதில் பறக்கும் ஒரு சிறகாக இருக்கும். பட்டம் இதழும் மாணவர்களின் சிந்தனையை விரிவாக்கி நல்ல பழக்க வழக்கங்களை உருவாக்கி, சமூக நற்பண்புகளை வளர்க்கும் ஒரு கல்விச் செல்வமாக திகழ்கிறது,'' என்றார்.

