sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குண்டும், குழியுமாக மாறிய ரயில்வே சுரங்க பாலம்

/

குண்டும், குழியுமாக மாறிய ரயில்வே சுரங்க பாலம்

குண்டும், குழியுமாக மாறிய ரயில்வே சுரங்க பாலம்

குண்டும், குழியுமாக மாறிய ரயில்வே சுரங்க பாலம்


ADDED : ஜூலை 02, 2025 09:42 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை தளி ரோட்டிலுள்ள ரயில்வே சுரங்க பாலம், குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை தளி ரோட்டில், ரயில்வே சுரங்க பாலம் உள்ளது. தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வரும் நிலையில், முறையாக பராமரிக்கப்படாததால், மழை காலத்தில், வெள்ள நீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது.

அதே போல், ஓடு தளமும், குண்டும், குழியுமாக மாறி, விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, தளி ரோடு ரயில்வே சுரங்க பாலத்தில், மழை நீர் வெளியேற்றும், சேகரிப்பு தொட்டி, மின்மோட்டார் உள்ளிட்ட கட்டமைப்புகளை புதுப்பித்து, மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல், ஓடு தளத்தை புதுப்பிக்கவும், மின் விளக்குகளை மாற்றவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us