sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மார்கழி மாத மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

/

மார்கழி மாத மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

மார்கழி மாத மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

மார்கழி மாத மழை; விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : டிச 26, 2024 11:42 PM

Google News

ADDED : டிச 26, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்; வழக்கமாக புரட்டாசியில் பெய்யும் மழைக்கு விவசாயிகள் விதைப்பு பணிகளை துவக்கி விடுவர். கார்த்திகை மாதத்துடன் பருவ மழை ஓய்ந்துவிடும்.

மார்கழி மாதத்தில் மூடுபனி மட்டுமே பெய்யும். மார்கழி மாத இறுதியில் அறுவடை பணியை முடித்துவிட்டு தை மாதத்தில் அறுவடை திருநாளை விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடுவர்.

நடப்பாண்டு பருவமழை தாமதமாக துவங்கியது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் ஐப்பசி மாதத்திலேயே விதைப்பு பணியை துவக்க முடிந்தது. மழை துவங்க ஒரு மாதம் தாமதம் ஆனதால் இறுதியில் மழை இல்லாவிட்டால் அறுவடை செய்ய முடியாதே என்று விவசாயிகள் வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் மார்கழி மாதத்திலும் மழை பெய்து வருகிறது. நேற்று பல இடங்களில் மழை பெய்தது. இது மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us