sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோடை சீசனிலும் சாகுபடி மழையால் மாற்றம்

/

கோடை சீசனிலும் சாகுபடி மழையால் மாற்றம்

கோடை சீசனிலும் சாகுபடி மழையால் மாற்றம்

கோடை சீசனிலும் சாகுபடி மழையால் மாற்றம்


ADDED : ஏப் 08, 2025 10:38 PM

Google News

ADDED : ஏப் 08, 2025 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; கோடை கால மழை பெய்து வருவதால், காய்கறி மற்றும் தானிய சாகுபடிக்கான பணிகளை உடுமலை பகுதி விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உடுமலை சுற்றுப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக கோடை கால மழை பெய்து வருகிறது. கோடை உழவுக்கு பிறகு, தென்மேற்கு பருவமழை துவங்கும் வரை, விளைநிலங்களில் சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டுவது வழக்கம்.

கோடை காலத்தில், அதிக வெயில் காரணமாக, செடிகள் முளைப்பு, வளர்ச்சி பாதிப்பது, தண்ணீர் பற்றாக்குறை, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், கோடை சீசனில், விளைநிலங்களில் சாகுபடி இருக்காது.

இந்தாண்டு, கோடை மழை குறிப்பிட்ட இடைவெளியில், பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

எனவே, தற்போதே, விளைநிலங்களில், சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக உழவு செய்த விளைநிலங்களில், வாய்க்கால், வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை துவக்கியுள்ளனர்.

தொடர்ந்து, காய்கறி சாகுபடிக்கு, நாற்று நடுதல், தானிய சாகுபடிக்கு விதைப்பு செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us