/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே சுரங்க பாலங்களில் தேங்கும் மழை நீர் : கிராம போக்குவரத்து துண்டிப்பு
/
ரயில்வே சுரங்க பாலங்களில் தேங்கும் மழை நீர் : கிராம போக்குவரத்து துண்டிப்பு
ரயில்வே சுரங்க பாலங்களில் தேங்கும் மழை நீர் : கிராம போக்குவரத்து துண்டிப்பு
ரயில்வே சுரங்க பாலங்களில் தேங்கும் மழை நீர் : கிராம போக்குவரத்து துண்டிப்பு
ADDED : டிச 18, 2025 07:47 AM

உடுமலை: உடுமலை பகுதியிலுள்ள ரயில்வே சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதித்து வருகிறது.
திண்டுக்கல் -- பாலக்காடு அகல ரயில்பாதை பணியின் போது, உடுமலை தளி ரோடு, பழநி ரோடு - மருள்பட்டி, எம்.பி., நகர், பெரியார் நகர், சடையபாளையம், ராகல்பாவி, அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில், ரயில்வே சுரங்க பாலங்கள் அமைக்கப்பட்டன.
கிராமங்களுக்கு பிரதான வழித்தடமாக உள்ள நிலையில், ரயில்வே சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், மழைக்காலத்தில், சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி, அவ்வழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.
தற்போது, பாலப்பம்பட்டி, மருள்பட்டி ரோடு, பெரியார் நகர், ராகல்பாவி இணைப்பு ரோடு உள்ளிட்ட பல இடங்களில், இப்பிரச்னை நிரந்தரமாக உள்ளது. முன்பு, சுரங்கப்பாதைகளின் அருகே மோட்டார் ரூம் அமைத்து, மழை நீரை வெளியேற்றி வந்தனர்.
பின்னர், மோட்டார் பழுது உள்ளிட்ட காரணங்களால், மழை நீரை வெளியேற்றும் பணியை கைவிட்டனர். மாதக்கணக்கில், கழிவு நீருடன், மழை நீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர். சுரங்க பாலத்தின் மீது, மேற்கூரை அமைக்கும் பணிகளும், பல இடங்களில் முடிவடையாமல் உள்ளதோடு, மேற்கூரை அமைக்க பகுதிகளிலும் கழிவு நீர் தேங்கி வருகிறது.
எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

