sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மழைக்கால பாதுகாப்பு மின் வாரியம் அறிவுரை

/

மழைக்கால பாதுகாப்பு மின் வாரியம் அறிவுரை

மழைக்கால பாதுகாப்பு மின் வாரியம் அறிவுரை

மழைக்கால பாதுகாப்பு மின் வாரியம் அறிவுரை


ADDED : அக் 25, 2025 01:10 AM

Google News

ADDED : அக் 25, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வ டகிழக்கு பருவமழைக்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, மின்வாரிய அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

திருப்பூர் மின் ஆய்வுத்துறை மின் ஆய்வாளர் பழனிசாமி அறிக்கை:

n வடகிழக்கு பருவமழை காலத்தில், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்கவேண்டும். ஒயரிங் வேலைகளை, அரசு உரிமம் பெற்ற நபர்கள் மற்றும் மின் ஒப்பந்ததாரர்களை கொண்டு மட்டுமே செய்யவேண்டும்.

n ஐ.எஸ்.ஐ., முத்திரையுள்ள, தரமான ஒயர், மின் சாதனங்களையே வாங்கி பொருத்தவேண்டும். பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்யவேண்டும்.

n பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு, நிலல இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் பிளக்குகள் பயன்படுத்தி மட்டுமே மின் இணைப்பு கொடுக்கப்பட ேவண்டும்.

n உடைந்த சுவிட்ச், பிளக்குகளை உடனடியாக மாற்றவேண்டும். கேபிள் டிவி வயர்களை, உயரழுத்த மின் கம்பிகளுக்கு அருகே கொண்டுசெல்லக்கூடாது. ஒவ்வொரு வீட்டுக்கும் சரியான நில இணைப்பு (எர்த்) அமைக்கப்பட்டிருக்கவேண்டும்; குழந்தைகள், விலங்குகள் தொடாதவகையில் பராமரிக்கவேண்டும்.

n மழைக்காலங்களில் மின் மாற்றிகள், மின்கம்பங்கள், ஸ்டே ஒயர்களின் அருகே செல்லக்கூடாது. மழை, காற்று காரணமாக அறுந்து விழுந்த மின் கம்பிகள் அருகே செல்லக்கூடாது; அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளிக்கவேண்டும்.

n பயன்பாடு இல்லாத நேரங்களில், மின் சாதனங்களை சுவிட்ச் ஆப் செய்துவைக்கவேண்டும். இனி, மின்னலின்போது, கான்கிரீட் கூரையினாலான பெரிய கட்டடம், வீடு அல்லது உலோகத்தாலான பஸ், கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சமடையுங்கள்.

n இடி, மின்னல் நேரங்களில், 'டிவி', மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், போன் பயன்படுத்தக்கூடாது; திறந்த நிலையில் உள்ள கதவு, ஜன்னல் அருகே இருக்கக்கூடாது.

n தண்ணீர் தேங்கிய இடங்களில் இருந்து விலகியிருக்கவேண்டும். ஈரமான கைகளால் மின் சுவிட்ச்களை இயக்கக்கூடாது.

5 ஆண்டுக்கு ஒருமுறை ஒயரிங்குகளை சோதியுங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்து, தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளுங்கள். மின் கம்பத்துக்காக போடப்பட்டுள்ள 'ஸ்டே ஒயர்' மீது அல்லது மின் கம்பத்தின் மீது கயிறு கட்டி, துணி காயப்போடக்கூடாது. குளியலறை மற்றும் கழிப்பிடத்தில், ஈரமான இடங்களில் சுவிட்ச்களை பொருத்தக்கூடாது. - மின் ஆய்வுத்துறை.








      Dinamalar
      Follow us