sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ராமேஸ்வரம் ரயில்; காத்திருக்கும் பயணியர் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

/

ராமேஸ்வரம் ரயில்; காத்திருக்கும் பயணியர் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

ராமேஸ்வரம் ரயில்; காத்திருக்கும் பயணியர் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

ராமேஸ்வரம் ரயில்; காத்திருக்கும் பயணியர் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளுமா?


ADDED : ஏப் 14, 2025 04:31 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : விடுமுறை நாட்களில், பாலக்காடு-சென்னை ரயிலில், கூடுதல் பெட்டிகளை சேர்க்க வேண்டும்; ராமேஸ்வரத்துக்கு மீண்டும் ரயில் இயக்க வேண்டும் என உடுமலை பகுதியை சேர்ந்த பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.

திண்டுக்கல்-பாலக்காடு அகல ரயில்பாதையில், உடுமலை வழியாக தற்போது கோவை-மதுரை இன்டர்சிட்டி; பாலக்காடு-திருச்செந்துார், திருவனந்தபுரம்-மதுரை (அமிர்தா எக்ஸ்பிரஸ்), பாலக்காடு-சென்னை, மேட்டுப்பாளையம்-துாத்துக்குடி (வாரம் இரு முறை) உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில், விடுமுறை தினங்களில், சென்னைக்கு செல்லும் ரயில்களில், அதிக கூட்டம் காணப்படுகிறது. உடுமலை சுற்றுப்பகுதியிலிருந்து விடுமுறை முடிந்து சென்னைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால், பாலக்காடு- சென்னை ரயிலில், கூடுதலாக பெட்டிகளை இணைத்து இயக்கினால், நுாற்றுக்கணக்கான பயணியர் பயன்பெறுவார்கள்.

மீண்டும் வருமா


மீட்டர் கேஜ் ரயில்பாதை இருந்த போது, உடுமலை வழியாக கோவை-ராமேஸ்வரம், கோவை-துாத்துக்குடி, பாலக்காடு - கொல்லம் போன்ற பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டன.

ஆனால், அகல ரயில்பாதையான பிறகு, ஏற்கனவே இயக்கப்பட்ட ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. தற்போது திருச்செந்துாருக்கு இயக்கப்படும் ரயிலுக்கு உடுமலை பகுதி பயணியரிடையே அதிக வரவேற்பு உள்ளது. இந்த ரயிலிலும், நெரிசலால் பயணியர் பாதித்து வருகின்றனர்.

இதே போல், ராமேஸ்வரத்துக்கு வாராந்திர ரயில் மட்டுமாவது இயக்க வேண்டும். இதனால், பழநி, மதுரை, ராமேஸ்வரம் என ஆன்மிக தலங்களுக்கு செல்லும் இரு மாநில பக்தர்களும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணியரும் பயன்பெறுவார்கள் என, பல்வேறு பொது அமைப்புகள் சார்பில், மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்துக்கு மனு அனுப்பி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us