sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஈர நிலங்களில் காணக் கிடைத்த அரிய பறவைகள்

/

ஈர நிலங்களில் காணக் கிடைத்த அரிய பறவைகள்

ஈர நிலங்களில் காணக் கிடைத்த அரிய பறவைகள்

ஈர நிலங்களில் காணக் கிடைத்த அரிய பறவைகள்


ADDED : பிப் 06, 2024 01:22 AM

Google News

ADDED : பிப் 06, 2024 01:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் குளம், குட்டை உள்ளிட்ட ஈர நிலங்களில், பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அரிய வகை பறவைகள் காண கிடைத்ததாக, பறவை கணக்கெடுப்பாளர்கள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுக்க ஈர நிலங்களில் வாழும் பறவைகள் குறித்த கணக் கெடுப்பு நடத்தப்பட்டது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்திலும், கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நஞ்சராயன் குளம், செம்மாண்டம்பாளையம், மாணிக்காபுரம், சாமளாபுரம், பள்ளபாளையம், சேவூர் குளங்கள், சங்கமாங்குளம், தாமரைக்குளம் உள்ளிட்ட இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

உடுமலை வட்டத்தில், தேன் குளம், ராயர் குளம், செங்குளம், பெரிய குளம், ஒட்டு குளம், செட்டியார் குளம், கரிசல் குளம், சின்ன வீரம்பட்டி ஏரி, மருள்பட்டி ஏரி, பாப்பன் குளம் என, மாவட்டம் முழுக்க, 20 குளம், குட்டைகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வனத்துறையினருடன், திருப்பூர் இயற்கை கழகத்தை சேர்ந்த, 14 பேர், தாராபுரம் இயற்கை கழகத்தைச் சேர்ந்த, 3 பேர் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. அரிய வகை பறவைகள் சில காணக் கிடைத்துள்ளன; காணக்கிடைத்த பறவைகளை பட்டியலிட்டு வருகிறோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us