sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 'திருவாசகம் படித்தால் தீய குணங்கள் விலகும்'

/

 'திருவாசகம் படித்தால் தீய குணங்கள் விலகும்'

 'திருவாசகம் படித்தால் தீய குணங்கள் விலகும்'

 'திருவாசகம் படித்தால் தீய குணங்கள் விலகும்'


ADDED : மார் 04, 2026 05:46 AM

Google News

ADDED : மார் 04, 2026 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'தினமும் திருவாசகம் படித்தால், மனதிலுள்ள தீய குணங்கள் அனைத்தும் நீங்கும்; எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம்' என சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசினார்.

கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை சார்பில், திருவாசகம் தொடர் பயிற்சி வகுப்பு, திருப்பூர் ஹார்வே குமாரசாமி மண்டப வளாகத்திலுள்ள திருவருள் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறும் இந்த வகுப்பில், கோவையை சேர்ந்த சைவ சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசியதாவது:

சிவபெருமான், திருப்பெருந்துறையில் எழுந்தருளிவந்து மாணிக்கவாசகருக்கு அருள் செய்தார். அதனை, 'நிலந்தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி' என, சிவபுராணத்தில் மனமுருகி பாடுகிறார் மாணிக்கவாசகர். நீயாகவே எனக்காக எழுந்தருளி வந்து, உனது திருவடிகளை காட்டி மகிழ்வித்தாய் என, உருகுகிறார்.

அருளாளர்கள் எல்லோரும் பெருமானின் திருவடிகளை அடைவதற்காகவே விண்ணப்பம் செய்கின்றனர். இந்த உயிர்கள் யாவும் அடையவேண்டிய இடம், பெருமானுடைய திருவடி.

அன்பான, எளிமையானவர்களுக்கு, அந்த திருவடியை, பெருமான் தானாகவே வந்து காட்டுகிறார். யாரெல்லாம் அன்பு காட்டுகின்றனரோ, அவர்களுக்கு அருள் என்கின்ற கருணையை திரும்ப தருகிறார் பெருமான்.

நெஞ்சில் ஆணவத்தால் ஏற்படும், காமம், குரோதம் போன்ற தீயனவற்றை நீக்குகிறார். தினமும் திருவாசகம் படித்தால், மனதிலிருக்கும் தீய குணங்கள் அனைத்தும் விலகி விடும். எப்போதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்க பெருமான் அருள்கிறார். எம்பெருமானை வழிபாடு செய்பவர்களும், உள்ளுணர்வால், பெருமான் அன்பு செய்ததாகவும் உணர்பவர்களுக்கு, சுவாமி கருணை மழை பொழிகிறார்.

இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us