/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் தேவை
/
அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் தேவை
ADDED : ஜூன் 23, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை அருகே அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் அமராவதி ஆற்றுப்பாலத்தில் மின்விளக்குகள், பிரதிபலிப்பான்கள் அமைக்கப்படவில்லை. இதனால், பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இங்கு பிரதிபலிப்பான், மின்விளக்குகள் அமைக்க பொதுப்பணித்துறை, மடத்துக்குளம் பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.