/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் பொருத்தணும்
/
அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் பொருத்தணும்
அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் பொருத்தணும்
அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் பொருத்தணும்
ADDED : டிச 05, 2025 08:46 AM
உடுமலை: திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தில், பிரதிபலிப்பான், மின்விளக்குகள் பொருத்த, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் உள்ளது. இங்கு அமைந்துள்ள அமராவதி ஆற்றுப்பாலம் வழியாக, தினமும் பஸ்கள், கார் உட்பட நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
ஆனால், ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான், மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில், இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதன் வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, இப்பாலத்தில், இவற்றை பொருத்த, நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

