/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீரின்றி தவித்த தென்னை மரங்கள் வேறு இடத்தில் வைத்ததால் மறுவாழ்வு
/
தண்ணீரின்றி தவித்த தென்னை மரங்கள் வேறு இடத்தில் வைத்ததால் மறுவாழ்வு
தண்ணீரின்றி தவித்த தென்னை மரங்கள் வேறு இடத்தில் வைத்ததால் மறுவாழ்வு
தண்ணீரின்றி தவித்த தென்னை மரங்கள் வேறு இடத்தில் வைத்ததால் மறுவாழ்வு
ADDED : பிப் 16, 2024 11:58 PM

பல்லடம் :கோவை மாவட்டம், சூலுார் தாலுகா, சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பூராண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி, 55, விவசாயி.தன், 5 ஏக்கர் நிலத்தில், 300 தென்னை மரங்களை பராமரித்து வந்தார்.மரங்களுக்கு போதிய தண்ணீர் இன்றி வறட்சியின் பிடியில் சிக்கியதால், அந்த மரங்களை அழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பழனிசாமி கூறியதாவது:
ஆழ்துளைக் கிணற்றில் நிலத்தடி நீர் 900 அடிக்கும் கீழ் சென்று விட்டது. ஐந்து ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தும், மரங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.இங்கு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் பாசன வசதியும் கிடையாது. கடந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இல்லை.தண்ணீரை விலைக்கு வாங்கி, தென்னைகளை காப்பாற்றி வந்தேன். தென்னை ஒன்றுக்கு, தினமும், 150 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. கோடைக்காலம் துவங்க உள்ளதால், தண்ணீரை விலைக்கு வாங்கி, மரங்களை காப்பாற்றுவது
சவாலானது.வெட்டி அழித்து விடலாம் என்று நினைத்தேன். சுல்தான்பேட்டையைச் சேர்ந்த விவசாயியும், அகழ் வாகன உரிமையாளருமான கனகராஜ், மரங்களை வேருடன் பெயர்த்து வேறு இடத்தில் நட்டு விடலாம் என்று யோசனை தெரிவித்தார்.இதன்படி வேருடன் பெயர்த்து செலக்கரிச்சலை சேர்ந்த சின்னதுரை என்பவரின் தோட்டத்தில் மறுநடவு செய்தோம். அந்த பகுதியில் செழிப்பான தண்ணீர் உள்ளதால், தென்னைகள் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.