sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அங்கன்வாடி மையத்தில் பாம்பு; அசம்பாவிதம் தவிர்ப்பால் நிம்மதி

/

அங்கன்வாடி மையத்தில் பாம்பு; அசம்பாவிதம் தவிர்ப்பால் நிம்மதி

அங்கன்வாடி மையத்தில் பாம்பு; அசம்பாவிதம் தவிர்ப்பால் நிம்மதி

அங்கன்வாடி மையத்தில் பாம்பு; அசம்பாவிதம் தவிர்ப்பால் நிம்மதி


ADDED : ஜன 20, 2024 02:42 AM

Google News

ADDED : ஜன 20, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;சாமளாபுரம் அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்த நாகப் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.சாமளாபுரம், மங்கலம் ரோட்டில் அங்கன்வாடி மையம் உள்ளது.

நேற்று காலை 11:00 மணியளவில் மையத்தில் குழந்தைகள் ஒரு புறம் அமர்ந்திருந்த நிலையில், பெரிய அளவிலான பாம்பு ஒன்று அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்தது.

இதனை பார்த்த மைய ஊழியர், மாணவர்களை வெளியேற்றி விட்டு, சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் பழனிசாமிக்கு தகவல் அளித்தார்.

மையத்துக்கு விரைந்த அவர், பாம்பு இருப்பதை உறுதிசெய்து, பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தீயணைப்பு துறையினர் சிறிது நேர முயற்சிக்குப் பின் அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் கேனில் அடைத்தனர்.

தொடர்ந்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்து வனப்பகுதியில் கொண்டு விட ஏற்பாடு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us