/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வழிகாட்டி பலகையில் காலனி பெயர் அகற்றம்
/
வழிகாட்டி பலகையில் காலனி பெயர் அகற்றம்
ADDED : ஜூன் 23, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: மண்ணின் ஆதி குடிகள் குறித்து, தவறாக சித்தரிக்கும், காலனி என்ற சொல்லை அரசு ஆவணங்கள், பொதுபுழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக, சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது.
ஆனால் சத்தியமங்கலத்தை அடுத்த கே.என்.பாளையம் பேரூராட்சி, 15வது வார்டு பகுதியில், வழிகாட்டி பலகையில் காலனி என்ற சொல் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக இரண்டு வழிகாட்டி பலகையில், காலனி என்று குறிப்பிட்டு ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை, பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக அகற்றினர்.