/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க; பஸ் ஸ்டாண்டில் மக்கள் அவதி
/
ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க; பஸ் ஸ்டாண்டில் மக்கள் அவதி
ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க; பஸ் ஸ்டாண்டில் மக்கள் அவதி
ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க; பஸ் ஸ்டாண்டில் மக்கள் அவதி
ADDED : ஜூன் 20, 2025 02:33 AM
உடுமலை : உடுமலை பஸ் ஸ்டாண்டில், ஆக்கிரமிப்புகள் அதிகளவில் காணப்படுவதால், பொதுமக்கள், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இங்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வெளியூர், டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும், ஆயிரக்கணக்கான பயணியர் பல்வேறு நகரங்களுக்கு செல்ல வருகின்றனர்.
இதனால், பஸ் ஸ்டாண்டில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்கு திருப்பூர் பஸ்கள் நிற்குமிடத்தில் பயணியர் காத்திருப்பதற்கான இடம் உள்ளது. இங்கு சிறிய தற்காலிக கடைகள் போடப்படுகின்றன.
அங்குள்ள கடைகளும் ஆக்கிரமிக்கின்றன. இதனால், பயணியர் அந்த இடத்தில் அமர முடியாமல் நின்று கொண்டு அவதிப்பட வேண்டியதுள்ளது.
பெண்களும், குழந்தைகளும் சிரமப்படுகின்றனர். இது மட்டுமல்லாமல் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தற்காலிக கடைகளும் போடப்படுகின்றன.
எனவே, பயணியருக்கு இடையூறாக போடப்படும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உடுமலை நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.