sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றி நீக்குங்க!

/

வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றி நீக்குங்க!

வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றி நீக்குங்க!

வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றி நீக்குங்க!


ADDED : ஜன 11, 2025 09:32 AM

Google News

ADDED : ஜன 11, 2025 09:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி, பொருளாதார பாதிப்பு ஏற்படுத்தும், காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்; தொடர் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கவும், உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், அனைத்து பகுதிகளிலும், காட்டுப்பன்றிகளால், நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

வன எல்லை மட்டுமல்லாது, வெகுதொலைவிலுள்ள கிராமங்களிலும், காட்டுப்பன்றிகள் பெருக்கம் அதிகரித்துள்ளது.

நிலக்கடலை, மக்காச்சோளம், சோளம், மா, தென்னை மற்றும் காய்கறி சாகுபடியிலும், காட்டுப்பன்றிகள் தொடர் சேதம் ஏற்படுத்தி வருகின்றன.

எண்ணிக்கை அதிகரிப்பால், விவசாயிகளும், காட்டுப்பன்றிகள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில், விளைநிலங்களுக்கும், கிராம இணைப்பு ரோடுகளில் செல்லவும், விவசாயிகள் அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

உடுமலை, மடத்துக்குளம் என இரு தாலுகாவிலும், பல நுாறு சதுர கி.மீ., பரப்பளவில், காட்டுப்பன்றிகள் பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:

காட்டுப்பன்றிகளால், பல ஆயிரம் ஏக்கரில் விவசாய சாகுபடி கேள்விக்குறியாகி வருகிறது. வரப்பு, பயிர்களை அழித்தல், விளைபொருட்கள் மற்றும் பாசன கட்டமைப்புகளை சேதப்படுத்துதல் என, பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம்.

வனத்துறையினர் இப்பிரச்னைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மவுனம் சாதிக்கின்றனர்.

பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை. சமவெளிப்பகுதியில் மட்டும் தங்கிப்பெருகும் காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இதற்கான கருத்துருவை, வனத்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து அரசுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சில ஆண்டுகளுக்கு முன் உடுமலை பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய சூழலில், அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து, போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us