sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாடகை பாக்கி: 5 கடைக்கு 'சீல்'

/

வாடகை பாக்கி: 5 கடைக்கு 'சீல்'

வாடகை பாக்கி: 5 கடைக்கு 'சீல்'

வாடகை பாக்கி: 5 கடைக்கு 'சீல்'


ADDED : பிப் 15, 2025 07:21 AM

Google News

ADDED : பிப் 15, 2025 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மாநகராட்சிக்கு வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாக கடைகள் நகரில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. இவற்றை வாடகைக்கு ஏலம் எடுத்த சில கடை உரிமையாளர்கள் பல மாதங்களாக முறையாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். இதனால், வாடகை நிலுவையில் உள்ள கடைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அவ்வகையில், வருவாய் பிரிவு உதவி கமிஷனர் கணேஷ்குமார் தலைமையில், வருவாய் பிரிவினர் வாடகை வசூலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதில் பல மாதங்களாக வாடகை நிலுவை வைத்திருந்த 3 கடைகள் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நேற்று முன்தினம் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. நேற்று தென்னம்பாளையம் வாரச்சந்தை வளாகம் முன்புறமுள்ள வணிக வளாக கடைகளில், கடை எண்: 3 - 1.48 லட்சம் ரூபாய், கடை எண்: 5, 6 - 4.18 லட்சம், கடை எண்: 7, - 6.85 லட்சம் மற்றும் கடை எண்: 17 - 2.40 லட்சம் ரூபாய் வாடகை நிலுவை வைத்திருந்தது. இதனால், ஐந்து கடைகளையும் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரன், பூட்டி 'சீல்' வைத்தார்.






      Dinamalar
      Follow us