/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை
/
கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை
ADDED : அக் 30, 2025 11:09 PM
உடுமலை:  உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் அகல ரயில்பாதையில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக கோவை -மதுரை, திருவனந்தபுரம் -ராமேஸ்வரம், பாலக்காடு -திருச்செந்துார், பாலக்காடு - சென்னை, திருநெல்வேலிக்கும் ரயில்கள் செல்கின்றன.
இதனால், ஏராளமான பயணியர் ரயில்களில் செல்ல இங்கு வருகின்றனர். இங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, பயணியரின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கவும், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

