ADDED : ஆக 29, 2025 09:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை ;உடுமலை நகர வணிக வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை நகரில், பசுபதி வீதி, சீனிவாசா வீதி, வ.உ.சி., வீதி, கல்பனா ரோடு, ராஜேந்திரா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள் அதிகம் உள்ளன. அத்தியாவசிய பொருட்கள், ஆடை, உட்பட பல்வேறு வணிக பொருட்கள் விற்பனை நடக்கிறது.
இந்த பகுதிகள், நகரின் மையமாகவும் இருப்பதால், பிரதானமான வழித்தடமாகவும் உள்ளன. நாள்தோறும், ஆயிரக்கணக்கான வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் அப்பகுதிகளை கடந்து செல்கின்றனர். தற்போது வணிக கடைகளின் ஆக்கிரமிப்பால் அப்பகுதியில் தொடர்ந்து நெரிசல் ஏற்படுகிறது.
நகராட்சி நிர்வாகத்தினர் இதுகுறித்து, இந்த பகுதிகளில் ஆய்வு நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.