/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உருக்குலைந்த மின்கம்பம் மாற்றியமைக்க கோரிக்கை
/
உருக்குலைந்த மின்கம்பம் மாற்றியமைக்க கோரிக்கை
ADDED : டிச 13, 2025 07:42 AM

உடுமலை: உருக்குலைந்து மின் விபத்து ஏற்படுத்தும் நிலையிலுள்ள தெரு விளக்கு மின்கம்பத்தால் அம்மாபட்டி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் அம்மாபட்டி. கிராமத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கிராம குடியிருப்பின் மையப்பகுதியில் பல்வேறு தேவைகளுக்காக மக்கள் கூடும் இடத்தில் தெருவிளக்கு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் பராமரிப்பு இல்லாமல் கான்கிரீட் பூச்சு உதிர்ந்து காணப்படுகிறது.
கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு உருக்குலைந்து மின்கம்பம் உள்ளதால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பெதப்பம்பட்டி உதவி பொறியாளர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்.

