sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பள்ளி அருகே பஸ் ஸ்டாப்  அமைக்க கோரிக்கை

/

பள்ளி அருகே பஸ் ஸ்டாப்  அமைக்க கோரிக்கை

பள்ளி அருகே பஸ் ஸ்டாப்  அமைக்க கோரிக்கை

பள்ளி அருகே பஸ் ஸ்டாப்  அமைக்க கோரிக்கை


ADDED : நவ 25, 2024 10:41 PM

Google News

ADDED : நவ 25, 2024 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை தளி ரோடு மேம்பாலம் அருகே, பள்ளி மாணவியர் பயன்படுத்தும் வகையில் பஸ் நிறுத்தம் வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

உடுமலை, தளி ரோடு மேம்பாலத்தின் அருகில், காந்தி சவுக், சிங்கப்பூர் நகர், பத்ரகாளியம்மன் லே - அவுட், உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. மாணவியருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றும் உள்ளது.

இப்பள்ளியில், ஆயிரத்துக்கும் அதிகமான மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு பஸ்சில் வரும் மாணவியர், ரயில்வே ஸ்டேஷன் அல்லது முதற்கிளை நுாலக பஸ் நிறுத்தத்திலிருந்து நடந்து வர வேண்டும்.

காலை நேரங்களில், கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து வரும் குழந்தைகள், மீண்டும் நடந்து பள்ளிக்கு செல்வதில் சோர்வடைகின்றனர். மேலும், முதற்கிளை நுாலகம் அருகிலுள்ள பஸ் ஸ்டாப் பகுதியில் மிகுதியான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

அதன் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் இருப்பதால், அப்பள்ளி மாணவர்கள் அதிகமாக அந்த பஸ் ஸ்டாப்பை பயன்படுத்துகின்றனர். சில நாட்களில் மாணவியர் கூட்ட நெரிசலுக்கு பயந்து, மாணவியர் யூனியன் அலுவலகம் பஸ் ஸ்டாப் வரை செல்ல வேண்டியுள்ளது.

அங்கும் நிழற்கூரை வசதி என எதுவும் இல்லாத நிலையில், பல குழந்தைகள் காத்திருக்க முடியாமல் மயக்கமடையும் நிலைக்கும் செல்கின்றனர்.

மேம்பாலம் அருகே பழைய நகராட்சி அலுவலக கட்டடம் முன்பு பஸ் நிறுத்தம் அமைக்கப்படுவதால், பள்ளி மாணவியர் மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பள்ளி நேரங்களில் மட்டும், மேம்பாலம் அருகே பஸ்களை நிறுத்த, போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us