sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாசன கால்வாய்களை துார்வார தீர்மானம்

/

பாசன கால்வாய்களை துார்வார தீர்மானம்

பாசன கால்வாய்களை துார்வார தீர்மானம்

பாசன கால்வாய்களை துார்வார தீர்மானம்


ADDED : ஜூன் 30, 2025 10:38 PM

Google News

ADDED : ஜூன் 30, 2025 10:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; நான்காம் மண்டல பாசன கால்வாய்களை உடனடியாக துார்வார வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குடிமங்கலம் ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டம் பெதப்பம்பட்டியில் நடந்தது. சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி கூட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் ராஜகோபால், சி.ஐ.டி.யு., ரங்கநாதன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், ஆனைமலையாறு, நல்லாறு அணை திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.

குடிமங்கலம் பகுதியில், நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசன கால்வாய்களை துார்வாரி, கடைமடைக்கு தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவராக தங்கவடிவேலன், ஒன்றிய செயலாளராக விஜயகுமார், ஒன்றிய பொருளாளராக மோகனசுந்தரம் உள்ளிட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளர் குமார் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார்.






      Dinamalar
      Follow us