நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் நிலை குறித்து, அமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தினர்.
அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள், அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.
மேயர் தினேஷ் குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தனர். மேலும், திருப்பூரில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் நிலை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகர துணை ஆணையர் கிரிஷ் அசோக் யாதவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.

