/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை மேம்பாட்டு பணிகள் துவக்கம்
/
சாலை மேம்பாட்டு பணிகள் துவக்கம்
ADDED : மார் 13, 2026 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: குண்டடம், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.6.52 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள் நேற்று துவக்கிவைக்கப்பட்டன. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், பணிகளை துவக்கிவைத்தனர்.
குண்டடம் ஒன்றியம் வட சின்னாரிபாளையம், எல்லப்பாளையம் புதுார், செங்கோடம்பாளையம் ஊராட்சி; தாராபுரம் ஒன்றியத்தில் சின்னபுத்துார், பொட்டிக்காம்பாளையம் பகுதிகளில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், நபார்டு திட்டம், பொது நிதி அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை முறைப்படுத்தும் கட்டண நிதி திட்டத்தில், சாலை மேம்பாட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.

