/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உடுமலையில் ஊர்வலம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உடுமலையில் ஊர்வலம்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உடுமலையில் ஊர்வலம்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உடுமலையில் ஊர்வலம்
ADDED : ஜன 24, 2026 04:55 AM

உடுமலை: உடுமலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், 37வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
ஊர்வலத்தை உதவி கோட்ட பொறியாளர் ராமுவேல் துவக்கி வைத்தார். உதவி பொறியாளர் லோகேஸ்வரன், சாலை ஆய்வாளர் குருசாமி முன்னிலை வகித்தனர். 'சாலை பாதுகாப்புக்கு பத்து' என்ற தலைப்பில், ஊர்வலம் நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்ட அலுவலகத்தில் துவங்கி, பஸ் ஸ்டாண்ட் வரை நடந்தது.
ெஹல்மெட், சீட்பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும்; சாலை விதிகளை மதித்து, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை உள்ளடக்கிய பதாகைகளை ஏந்தி சாலைப்பணியாளர்கள் ஊர்வலமாக சென்றனர். மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதே போல், உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பிலும், விழிப்புணர்வு ஊர்வலம் உடுமலையில் நடந்தது.

