/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை பணிகள் மிகவும் மந்தம்... 'நெட் ஒயர்' மின் கம்பத்தில் தஞ்சம்!
/
சாலை பணிகள் மிகவும் மந்தம்... 'நெட் ஒயர்' மின் கம்பத்தில் தஞ்சம்!
சாலை பணிகள் மிகவும் மந்தம்... 'நெட் ஒயர்' மின் கம்பத்தில் தஞ்சம்!
சாலை பணிகள் மிகவும் மந்தம்... 'நெட் ஒயர்' மின் கம்பத்தில் தஞ்சம்!
ADDED : ஜன 29, 2024 11:40 PM

வீணாகும் தண்ணீர்
பெருந்தொழுவு செல்லும் ரோட்டில், மாட்டுச்சந்தை மைதானம் அருகே, புதியதாக அமைக்கப்பட்ட குழாய் உடைந்து, தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- கோவிந்தராஜ், சத்யா காலனி. (படம் உண்டு)
கண்காணிப்பது யார்?
திருப்பூர், 40வது வார்டு, இடுவம்பாளையம், காமாட்சியம்மன் கோவில் வீதியில், மர்மநபர்களால் மரங்கள் அடிக்கடி வெட்டப்படுகிறது. வருவாய்துறை அதிகாரிகள், போலீசார் கண்காணிப்பதே இல்லை.
- குமரேசன், இடுவம்பாளையம். (படம் உண்டு)
கழிவுநீரால் அவதி
திருப்பூர், பலவஞ்சிபாளையம், திருக்குமரன் நகர், முதல் வீதியில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. விரிவான கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.
- சிவன்பாண்டி, திருக்குமரன் நகர். (படம் உண்டு)
பணிகள் மிக மந்தம்
அவிநாசி, தெக்கலுார், சென்னிமலைபாளையம் நஞ்சப்ப கவுண்டர் காடு பகுதியில் தார் ரோடு போட ஜல்லி, மண் கொட்டி பல மாதங்களாகிறது. ரோடு போடவில்லை. புழுதி பறந்து, வாகன ஓட்டிகள் கண்களில் நிறைகிறது.
- கோபால், சென்னிமலைபாளையம். (படம் உண்டு)
தெருவிளக்கு எரிவதில்லை
திருப்பூர், குருவாயூரப்பன் நகர் வடக்கு ஆரம்ப சுகாதார நிலையம்செல்லும் வழியில் தெருவிளக்கு எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
- ஜெய்கணேஷ், குருவாயூரப்பன் நகர். (படம் உண்டு)
மாநகராட்சி கவனத்துக்கு
திருப்பூர், வடக்கு உழவர் சந்தை பின்புறமுள்ள மாநகராட்சி சிறுவர் பூங்காவில் உபகரணங்கள் உடைந்துள்ளது. வந்து பார்க்கும் குழந்தைகள் ஏமாற்றம் அடைகின்றனர். மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு சரிசெய்ய முன்வர வேண்டும்.
- உமாசங்கர், எஸ்.வி., காலனி. (படம் உண்டு)
விழும் நிலையில் தொட்டி
அவிநாசி, நடுவச்சேரி ஊராட்சி, தளிஞ்சிபாளையத்தில் விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி விரிசலுடன் காணப்படுகிறது. தாமதமின்றி சீரமைக்க வேண்டும்.
- கிருஷ்ணசாமி, தளிஞ்சிபாளையம். (படம் உண்டு)
தடுமாறும் வாகன ஓட்டிகள்
திருமுருகன்பூண்டி - பெரியாயிபாளையம் சாலையில் பி.எஸ்.என்.எல்., இணையதள ஓயர்கள் சாலை வளைவில் கிடப்பதால், வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர்.
- ஆறுமுகம், பெரியாயிபாளையம். (படம் உண்டு)
குழாய் உடைப்பு
அவிநாசி - மேட்டுப்பாளையம் ரோடு, செம்பியநல்லுார் ரைஸ் மில் எதிரில் குழாய் உடைந்து ஒரு மாதமாக தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- கணபதி, செம்பியநல்லுார். (படம் உண்டு)
சாலை படுமோசம்
திருப்பூர், பி.என்., ரோடு, போயம்பாளையம் பிரிவு, கங்கா நகரில் சிக்னல் அருகே சாலை சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் இரவில் தடுமாறி விழுகின்றனர்.
- விவேக், கங்கா நகர். (படம் உண்டு)
மின்வாரியம் கவனத்துக்கு...
திருப்பூர், 48வது வார்டு, ராக்கியாபாளையம், பட்டத்தரசியம்மன் கோவில் வீதியில் உயர்மின் அழுத்த கம்பியில் இன்டர்நெட் ஒயர் சுற்றப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.
- ராஜேந்திரன், பத்மினிகார்டன். (படம் உண்டு)
வீணாகும் மின்சாரம்
திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டில், ரயில்வே கேட் அருகே, காலை, 10:00 மணி வரை தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது.- சங்கரமோகன், கொங்கு மெயின் ரோடு. (படம் உண்டு)
------
ரியாக் ஷன்
உடைப்பு சீரமைப்பு
திருப்பூர், கல்லாங்காட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகியது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் மூலம் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு விட்டது.
- கார்த்திகேயன், கல்லாங்காடு. (படம் உண்டு)