/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்வோதய சங்கத்தில் ரூ.1.14 கோடி கையாடல்
/
சர்வோதய சங்கத்தில் ரூ.1.14 கோடி கையாடல்
ADDED : டிச 08, 2024 11:44 PM

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், கொடுவாய் சர்வோதய சங்கத்தில், 1992ல் பணியில் சேர்ந்தவர் குமாரசாமி, 54. உதவியாளராக சேர்ந்த இவர், விற்பனை மேலாளராகவும் பணிபுரிந்தார். கடந்த ஆண்டு சங்க செயலராக பதவி உயர்வு பெற்றார்.
கடந்த அக்டோபரில் நடந்த சங்க செயற்குழு கூட்டத்தில் நடந்த ஆய்வின் போது, விற்பனை தொகை, 1.14 கோடி ரூபாயை இவர் கையாடல் செய்தது தெரிந்தது.
இதையடுத்து, செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த மாதம் 25ல், கையாடல் செய்த தொகையை திரும்ப செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், 27ம் தேதி முதல் அவர் தலைமறைவாகி விட்டார். சங்க செயலர் குமார், திருப்பூர் எஸ்.பி., மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.