ADDED : மார் 01, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலை பகுதியிலுள்ள கிராமங்களுக்கு போதிய பஸ் வசதியில்லாமல், மக்கள் தவித்து வருகின்றனர். உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு, பல்வேறு பணிகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். ஆனால், அவர்கள் கிராமங்களுக்கு செல்ல போதுமான பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
இதனால், குறைந்த அளவில் இயக்கப்படும் பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

