sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 காசிவிஸ்வநாதருக்கு சங்காபிேஷக விழா

/

 காசிவிஸ்வநாதருக்கு சங்காபிேஷக விழா

 காசிவிஸ்வநாதருக்கு சங்காபிேஷக விழா

 காசிவிஸ்வநாதருக்கு சங்காபிேஷக விழா


ADDED : டிச 02, 2025 06:37 AM

Google News

ADDED : டிச 02, 2025 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நிருபர் குழு -

உடுமலை கோவில்களில் நேற்று நடந்த சங்காபிேஷக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கார்த்திகை மாதம் மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், காசி விஸ்வநாதர் சன்னதி முன், 108 சங்காபி ேஷக பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தில்லை நகர் ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேசுவரர் கோவிலில், பத்தாம் ஆண்டு, சங்காபிேஷக பெருவிழா நடந்தது. விழாவையொட்டி, மாலை, 3:30 மணிக்கு வேள்வியும், 6:00 மணிக்கு மேல், சங்காபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, எம்பெருமானுக்கு அபிேஷகம், அலங்காரம் நடந்தது.

* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, கார்த்திகை மாதம் மூன்றாவது சோமவார சங்காபிேஷகம் விழா நேற்று மாலை நடந்தது.

பூஜையில், மாலை, 4:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது.மாலை, 5:00 மணிக்கு காசிவிஸ்வநாதருக்கு, சிவலிங்க வடிவில், 308 சங்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு யாகபூஜை நடந்தது.

பூஜைக்கு பின் பக்தர்கள் புனித நீரை கையில் ஏந்தி கோவிலை மூன்று முறை வலம் வந்தனர். அத-ன் பின் சங்காபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.

* பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சேரன் தொழிலாளர் காலனி செல்வவிநாயகர் கோவிலில், சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு நடந்தது.

பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதேபோன்று, டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் கார்த்திகை சோமவார வழிபாடு நடந்தது.






      Dinamalar
      Follow us