sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சம்பள உயர்வு வழங்க வேண்டும்; துாய்மை பணியாளர் 'ஸ்டிரைக்'

/

சம்பள உயர்வு வழங்க வேண்டும்; துாய்மை பணியாளர் 'ஸ்டிரைக்'

சம்பள உயர்வு வழங்க வேண்டும்; துாய்மை பணியாளர் 'ஸ்டிரைக்'

சம்பள உயர்வு வழங்க வேண்டும்; துாய்மை பணியாளர் 'ஸ்டிரைக்'


ADDED : ஜூன் 26, 2024 02:34 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;கோர்ட் உத்தரவுப்படி, துாய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர் வழங்க கோரி, திருப்பூரில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயித்து வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், உள்ளாட்சி நிர்வாகங்கள் குறைந்த ஊதியம் வழங்குவதால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி துாய்மை பணியாளர், குடிநீர், வாகன ஓட்டுனர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர்.

கலெக்டர் அலுவலகம் முன், நேற்று காலை பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தப்பட்டது. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பழனிசாமி, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் மூர்த்தி, துணை தலைவர் உண்ணிகிருஷ்ணன், சுமை பணி தொழிலாளர் சங்க தலைவர் பாலன் முன்னிலை வகித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி, காங்கயம், பல்லடம், உடுமலை, திருமுருகன்பூண்டி நகராட்சி, மடத்துக்குளம், முத்துார், ஊத்துக்குளி, குன்னத்துார் பேரூராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர், குடிநீர் பணியாளர், வாகன ஓட்டுனர்கள் திரளாக பங்கேற்றனர்.

தொடர்ந்து, தொழிலாளர் நல அதிகாரி தலையைில், முத்தரப்பு பேச்சு நடந்தது. அதில், முடிவு எட்டப்படாததால், இன்றும் போராட்டம் தெடாரும் என்று துாய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

------------

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், போராட்டம் நடத்திய துாய்மை பணியாளர்கள்.






      Dinamalar
      Follow us